நாயுருவி மூலிகையின் மருத்துவ குணங்கள்
தேவையான பொருட்கள்
நாயுருவி
இலைகள்
கால் கிலோ
மிளகாய்
4
4
மிளகு
50 மில்லி
50 கிராம்
எண்ணெய் (அ) நெய் :
பாசிப்பயறு
மல்லி இலை
1கொத்து
கறிவேப்பிலை
1 கொத்து
25 கிராம்
உளுத்தம் பருப்பு
மிளகளவு
பெருங்காயம்
கோலியளவு
தேவையான அளவு
புளி
உப்பு
தக்காளி
1
வெங்காயம்
:
:
:
:
50 கிராம்
செய்முறை
பாசிப்பயிறையும், உளுந்தம் பருப்பையும் பொன் வறுவலாக வறுத்தெடுத்துக் கொள்ளவும்.
இக்கீரையை வாணலியில் நன்றாக, பச்சை வாசனை மறையும் வரை கறுகாமல் வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
அடுத்து மற்ற மேற்கூறிய அனைத்துப் பொருட்களையும், வறுத்தும்,
வதக்கியும் எடுத்து ஆறியபின் ஆட்டிக் கொள்ளவும் துவையல் தயார்.
மூலிகை குணங்கள்
சாவையே தடுக்கும் குணம் கொண்டது சித்தர்களால் போற்றப்பட்டது.
அதற்காக வேகமாக வரும் இரயிலோ அல்லது பேருந்து முன்னால் நின்றால் விடத்து ஏற்படாது என்று அர்த்தமல்ல.
அதாவது, நோய்களைத் தடுக்கும் மகா சக்தி கொண்டது.
உடலுக்கு உஷ்ணத்தைதரக்கூடியது. நுரையீரல் சம்பந்தமான
நோய்களைக் குணப்படுத்தும்.
முகத்திற்கு அழகூட்டக் கூடியது.
வயிற்று நோய்களை குணப்படுத்தும். கபத்தைப் போக்கும்.
மூல நோய்களையும் குணமாக்கும். இரத்தத்தில் உள்ள கிருமிகளை அகற்றும் சக்தி கொண்டது.
நரம்பத் தசை மற்றும் மூளையை வலுவூட்டச் செய்யும்.
ஆறாத புண்களை ஆற்றி விடும். கண், காது, மூக்கு, இதய
நோய்களை குணப்படுத்தும்.